சவுதி விமான நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல்!!

சவுதி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.


யேமன் கிளர்ச்சியாளர்களினால் நேற்று(புதன்கிழமை) இந்த ஏவுகணைத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள சவுதி கூட்டுப் படை செய்தித் தொடர்பாளர் துருக்கி அல்-மாலிக்கி,

சவுதி அரேபியாவின் அபா நகர விமான நிலையத்தில் யேமனைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதில், 26 பேர் காயமடைந்தனர். அவர்களில் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காயமடைந்த 18 பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தாக்குதலைத் தொடர்ந்து அபா நகரில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

மலைப்பகுதியில் அமைந்துள்ள அபா நகரம், கோடைகால சுற்றுலாத் தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.