தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகள் விடுதலைப் புலிகளே – ஆனந்த சங்கரி!!

விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.


அத்துடன், அவர்கள் கூறும் 22 பேர் மாத்திரமே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதுடன் வேறு எவரும் போட்டியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அஸ்கிரிய மகா நாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் விலகிமை குறித்தும், 83ஆம் ஆண்டு கலவரத்திற்குப் பின்னர் தமிழ் அரசியல்வாதிகள் விலகியது குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து பதிலளித்த அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இதேபோல் தங்களது பதவிகளை விட்டு விலகவேண்டும். இதற்கு மிக முக்கிய காரணம் வடக்கு கிழக்கு மக்களின் இராஜதந்திர உரிமையை இல்லாதொழித்தது அவர்கள் தான்” என கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.