இந்திய இலங்கை இராணுவ உறவுப்பாலம்!!

இலங்கை இராணுவத்தை சேர்ந்த 160 வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவில் உள்ள புத்தகாயாவிற்கான விசேட யாத்திரையொன்றை மேற்கொண்டுள்ளனர்.


அத்துடன் இந்தியாவிலிருந்து 160 ஆயுதப்படையினர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இலங்கைக்கு பரஸ்பர விஜயம் செய்துள்ளனர்.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக ஜூன் 15 - 18 காலப் பகுதியில் இந்த யாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான, இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோர் இலங்கைக்கு வரும் இந்திய குழுவினரை வரவேற்பதற்கும் மற்றும் இலங்கைக் குழுவினரை இந்தியாவிற்கு வழியனுப்பி வைப்பதற்குமாக விமான நிலையத்தில் இருந்துள்ளனர்.

யாத்திரையின் போது, இலங்கை ஆயுதப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் புனித மாகாபோதி ஆலயம், 80 அடி உயர புத்தர் சிலை, ராஜ்கிர் மற்றும் நாலந்த அருங்காட்சியகம் என்பவற்றுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை இராணுவத் தளபதியின் ஒரு விசேட வேண்டுகோளின் பெயரில் வரும் இந்திய குழுவினர் இலங்கையில் உள்ள முக்கியமான இடங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இது, கண்டியில் புனித தந்த ஆலயத்திற்கு விஜயம் செய்து வணக்கம் செலுத்துதல் மற்றும் காலிக்கான விஜயம் என்பவற்றை உள்ளடக்கியிருக்கும்.

இந்திய ஆயுதப் படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஒரு பெரும் குழு ஒரு விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவையாகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.