எறியப்பட்டது செருப்பு அல்ல நெருப்பு !

சிலர் அணிவதால் செருப்புக்கு பெருமை கிடைக்கிறது.

சிலருக்கு அடிப்பதால் செருப்பு பெருமை பெறுகிறது.

ஆம். சுமந்திரனுக்கு வீசியதால் ஒரு செருப்பு கல்முனையில் பெருமை பெற்றுள்ளது.

சுயமாக சிந்திக்காமல் ஒரு கட்சியின் பின்னால் நின்று அது செய்வதெல்லாம் சரி என்று வாதிடுவதுதான் தேசபக்தி என்றால் அந்த தேசபக்தி என் செருப்புக்கு சமம் என்றார் சுபாஷ் சந்திரபோஸ்

அதேபோல் நல்லாட்சி அரசுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு அதையே சாணக்கியம் என்றால் அந்த சாணக்கியம் தமது செருப்புக்கு சமம் என்று கல்முனை தமிழ் மக்கள் சுமந்திரனுக்கு காட்டியுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.