கல்முனை ஆர்ப்பாட்டமும் ஞானசாரதேரரின் வாக்குறுதியும்!!

கல்முனையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் கூடியிருந்த மக்களை சந்திக்க சென்ற ஞானசார தேரர் ஏற்கனவே அரசியல் நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளார்.


ஏனெனில் மக்களை சந்திப்பதற்கு முன்னரான இரவே அவர் ஹாரிஸை சந்தித்து இந்த பிரச்சினையை தீர்ப்பதாக வாக்குறுதியளித்து விட்டே மக்களை சந்தித்துள்ளார்.

போராட்டகாரர்களை ஏமாற்றிய ஞானசார தேரரிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட அதிகமாக சோரம் போனது அப்பாவி தமிழ் மக்களே.

ஞானசாரர் தீர்வை எடுத்து தருவார் என கோசமிட்டவர்கள் எதுவும் இல்லாமல் வெற்று வார்த்தைகளுடன் பெறுமதியான போராட்டத்தை அடக்கிவிட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை பழிவாங்க வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் போராட்டக்காரர்களுக்கு இருந்ததே தவிர வேறு எந்த மன நிலையிலும் அவர்கள் இருக்கவில்லை.

அதனாலேயே ஞானசார தேரருக்கு அவர்களை இலகுவாக ஏமாற்றக்கூடியாக இருந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.