ஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி!

19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இரத்துச் செய்வது நாட்டிற்கு நல்லதல்ல என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.


நல்லாட்சியை நாட்டினுள் ஸ்தாபிப்பதற்கும் அரசியலமைப்பின் 18 மற்றும் 19வது திருத்தச் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் ஜனாதிபதியின் குறித்த கூற்று தொடர்பாக கருத்து வெளியிடும் போதே பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இரத்துச் செய்வது நாட்டிற்கு எவ்விதத்திலும் நல்லதல்ல.

19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இரத்து செய்யாமல் அதற்கு மேலதிகமாக சீர்திருத்தம் ஒன்றை இணைத்துக்கொள்வது மாத்திரமே தற்போது செய்யப்பட வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.