சஹ்ரானின் மனைவி வழங்கிய முக்கிய சாட்சியம்..!!

ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவியிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


அதற்கமைய கல்முனை பொலிஸ் நிலையத்தில் அவரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றது.

இதேவேளை சாய்ந்தமருதில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு முன்னர், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்து அவர் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) காலை முன்னிலைப்படுத்தியபோதே அவர் இந்த விடயங்கள் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறிப்பாக தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் தன்னுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்கள் குறித்தே வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து திகதி குறிப்பிடப்படாது விசாரணைகளை ஒத்திவைப்பதாக கல்முனை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன் பின்னரே அவரை கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன்போது அவருடன், சஹ்ரானின் மகளும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்துவரப்பட்டிருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.