இஸ்ரேல் படை இலங்கைக்குள் நுழைந்தது !

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தலை முறியடிப்பதற்கு, உதவ இஸ்ரேல் முன்வந்துள்ளது. என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அத்துடன் இஸ்ரேலின் யமாம் பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரின் மூலம் சிறிலங்காவுக்கு உதவி வழங்கவும் அந்நாடு முன் வந்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இந்த ஊடகம் மேலும் தெரிவித்திருப்பதாவது,

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் ஐ.எஸ் அமைப்பானது ஸ்ரீலங்காவில் நடத்திய தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலில் தொழில்புரியும் ஸ்ரீலங்கா நாட்டவர்கள், அந்த நாட்டிலுள்ள அதிகாரிகளிடம் ஐ.எஸ். தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து தகவல் வழங்கியுள்ளனர் எனவும் இதனையடுத்தே, தமது யமாம் பொலிஸ் பிரிவின் மூலம் ஸ்ரீலங்காவுக்கு உதவி வழங்க இஸ்ரேல் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உலகிலுள்ள பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். தீவிரவாதிகள், இஸ்ரேலின் யமாம் பொலிஸாருக்கு மாத்திரமே பயப்படுகிறார்கள் எனவும், இந்த யமாம் பொலிஸார் எந்த இடத்திலிருந்து செயற்படுகின்றார்கள் என்பது இஸ்ரேல் மக்களுக்கே தெரியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சில வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலினால் சிறிலங்கா இராணுவத்துக்குப் பயிற்சியொன்றும் வழங்கப் பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.