இலங்கை ஆபத்தில் - புரட்சிக்கு ஆயத்தமாகிறார் ஞானசாரதேரர்!!

நாடு பாரிய ஆபத்துக்கு முகங்கொடுத்துள்ளது. அதனை மீட்டெடுக்க அனைவரும் உதவ வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதற்காக நாட்டு மக்கள் சிறு நிதியுதவியை செய்ய முன்வருமாறு பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆபத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக ஆரம்பிக்கப்படும் தேசிய நடவடிக்கைக்காக 100 ரூபாய் என்ற கணக்கில் பண உதவி செய்யுமாறு தேரர் மக்களிடம் கோரியுள்ளார்.

கண்டியில் தேசிய மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாடு ஆபத்தான நிலைமையில் காணப்படுவதாகவும், ஜுலை மாதம் 7ஆம் திகதி மாநாட்டில் முக்கிய விடயங்கள் தொடர்பில் தகவல் வெளியிடுவதாகவும் தேரர் கூறியுள்ளார்.

உண்மையை வெளிப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகளுக்கு ஊடக உதவியை பெற பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக உதவுமாறும் ஞானசார தேரர் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.