குற்றம் சுமத்தியவர்களை விடப் போவதில்லை: அசாத் சாலி சூளுரை!!
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் ஷரியா பல்கலைக்கழகம் இல்லை. இலங்கையில் எங்கு ஷரியா பல்கலைக்கழகம் உள்ளது என்று நான் ஆசு மாரசிங்கவிடம் கேட்டேன். பெட்டிகலோ கெம்பஸ் என்ற நிறுவனம் உள்ளது.
பெட்டிகலோ கெம்பஸ் நிறுவனத்தை அரசாங்கம் கையகப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை முன்னெடுக்கவே அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டது. பதவியை விட்டு விலகி சும்மா இருக்கின்றேன் என நினைக்கலாம். நான் சும்மா இருக்கவில்லை. என் மீது குற்றம் சுமத்தியவர்களிடம் கோடிக்கணக்கில் இழப்பீட்டை பெறாமல் விடப் போவதில்லை.
மேலும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சம்பந்தமாக குற்றம் சுமத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை