ரயில் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

வாரந்தோரும் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கம் அதனை இன்று முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.


அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறுப்பட்ட கோரிக்கைளை முன்வைத்து கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து கடந்த 23ஆம் திகதி தற்காலிகமாக ரயில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

எனினும் தங்களது கோரிக்கைக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் நள்ளிரவு 12 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக ரயில் தொழிற்சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்தமானியில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று கைச்சாத்திட்டுள்ளார்.

அத்துடன் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.