பிரேஸிலில் துப்பாக்கி கட்டுப்பாட்டை தளர்த்தும் உத்தரவு மீளபெறப்பட்டது!!

பிரேசிலில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டை தளர்த்தும் உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோவினால் இந்த உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரேசில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி பொல்சொனாரோ கடந்த மே மாதம் பிறப்பித்தார்.

எனினும், குறித்த உத்தரவை நாடாளுமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது.

உயர் நீதிமன்றமும், அரசியலமைப்பிற்கு உட்பட்டு குறித்த உத்தரவு செல்லுபடியாகுமா என்பது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையிலேயே குறித்த உத்தரவினை பிரேசில் ஜனாதிபதி மீளப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.