துனிசிய தலைநகரில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்!

துனிசியாவின் தலைநகரான துனிஸின் மையத்தில் ன்று காலை இரண்டு தற்கொலைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


துனிசியா பிரெஞ்சு தூதரகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்திற்கு அருகே இரட்டை தற்கொலைகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

முதல் தாக்குதல் காலை 11 மணியளவில் தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் வாகனமொன்றை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்க பயங்கரவாத எதிர்ப்பு தலைமையகத்தின் கார் நிறுத்துமிடத்தில் இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிதுள்ளன.

இந்த தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்ததாகவும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மற்றும் பொதுமக்கள் மூவர் காயமடைந்துள்ளதாகவும் துனிசிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.