ட்ரம்புக்கு புடின் அழைப்பு !

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


இரண்டாம் உலகப்போரின் 75ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ரஷ்யாவுக்கு வருமாறு புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜப்பானின், ஒசாகா நகரில் நடைபெற்று வரும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின் போது, இரு நாட்டு உறவு, சர்வதேச பிரச்சினைகள் மற்றும் வர்த்தக ரீதியிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் அடுத்த ஆண்டு மே 9ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் உலகப்போரின் 75ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு ட்ரம்பிற்கு புடின் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்ததை அனுஷ்டிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 9ஆம் திகதி ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் வெற்றிநாள் கொண்டாடப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.