தனி நபா்களால் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் எச்சாிக்கை!!

தீவிரவாதி சஹ்ரான் மற்றும் ாில்வான் ஆகியோருக்கு பின்னா் தீவிரவாத அமைப்பிற்கு தலமைதாங்கவிருந்த நௌவ்பா் என்ற நபா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தீவிரவாத அமைப்பு மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பில்லை.


ஆனாலும் மத தீவிரவாதம் தனி நபா்களாலும் இடம்பெறலாம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சா் ருவாண் விஜயவா்த்தன எச்சாித்துள்ளாா். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீட்டிக்கும் விவாதத்தில் பதிலுரை ஆற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் 9 பெண்கள் உள்ளிட்ட 105 பேர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதை கூற முடியும்.

அதேபோல் இந்த தாக்குதல் குறித்து எமக்கு சர்வதேச விசாரணைக் குழுக்கள் உதவி செய்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் சஹ்ரான் அணியை நாம் முழுமையாக பிடித்துள்ளோம். சஹ்ரானின் பின்னர் அவரது தம்பி ரில்வான் தலைமைத்துவம் எடுக்க இருந்தார். ஆனால் அவர் இறந்துவிட்டார். அவரின் பின்னர் நெளவ்பர் என்ற நபர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் அடுத்த தலைமையை கையில் எடுக்க இருந்தவர்.

அதேபோல் குண்டு தயாரிக்க இருந்த நபர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர். இப்போது ஏன் அவசரகால சட்டம் என்ற கேள்வி எழும். ஆனால் விசாரணைகளை நடத்த வேண்டும். இன்றும் சஹ்ரானின் சகாக்கள் கைதாகி வருகின்றனர். ஒரு சிறு உதவி செய்த நபர்களையும் நாம் கைது செய்கின்றோம்.

ஆகவே இந்த தேடுதல்கள் நடத்த மேலும் ஒரு மாதகால அவகாசம் வேண்டும். அதற்காகவே சட்டத்தை நீடித்துள்ளோம். இன்னும் ஒரு மாத காலத்தில் அவசரகால சட்டத்தை நீக்க நாம் நடவடிக்கை எடுக்க முடியும்.

எவ்வாறு இருப்பினும் கோவில்கள், பாடசாலைகள் மற்றும் உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு இன்னமும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆகவே ஒரு மாதகாலமேனும் நீடிக்க வேண்டும் என நினைகின்றோம்.

இராணுவ தளபதி கூறியது சரி இந்த தாக்குதல் எப்போதும் எங்கேயும் நடக்கலாம். இது மதம் சார்ந்த பயங்கரவாதம். ஒரு தனி நபர் எந்த வகையிலும் எதை ஆயுதமாக பயன்படுத்தியும் தாக்குதலை நடத்த முடியும்.

ஆகவே இனி எப்போதும் இந்த தாக்குதல் மாதிரி ஒன்று நடக்காது என கூற முடியாது. ஆனால் சஹ்ரான் போன்று ஒரு குழுவால் இதனை இன்னொருமுறை செய்ய முடியாது என்று உறுதியாக கூற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.