தென்கொரிய ஜனாதிபதியின் கருத்தை நிராகரித்தது வட கொரியா!

தென் கொரிய ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட கருத்திற்கு வட கொரியா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னிற்கும் இடையிலான மூன்றாம் கட்ட சந்திப்பினை நடத்துவது குறித்த இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இதுகுறித்த தகவல்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் கருத்தினை வட கொரியா முற்றாக நிராகரித்துள்ளது.

இதுகுறித்து வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சரக உயரதிகாரி குவான் ஜாங்-குன் நேற்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னிற்கும் இடையில் 3-ஆவது முறையாக நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தென் கொரிய ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆனால், உண்மை நிலைவரம் இதற்கு நேர்மாறானதாகும். வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்பட தென் கொரியா முயல வேண்டாம்.

அமெரிக்காவுடனான பேச்சுவர்த்தை தொடர்பாக தென் கொரியாவுடன் எந்த தகவல்களையும் நாங்கள் பரிமாறிக்கொள்ளவில்லை.

அமெரிக்காவுடன் பேச வேண்டுமென்று விரும்பினால், அந்த நாட்டுடன் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தொடர்பு அலுவலகத்தின் மூலம் நாங்கள் அதுகுறித்து நேரடியாக பேசிக் கொள்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.