இசை கற்கும் மாணவர்கள்தான் பள்ளியில் முதலிடம் - ஆய்வு !!

ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்கு டியூசன் செல்பவர்களைவிடவும் இசையைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள்’ என்று கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


தற்போது மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று பாடங்களை மட்டும் கற்காமல் ‘எக்ஸ்ட்ரா கர்ரிகுலர் ஆக்டிவிட்டிஸ்’ என்று அழைக்கப்படும் விளையாட்டுகள், மொழிப் பயிற்சிகள், கராத்தே, சிலம்பம், கணினி வகுப்புகள், நீச்சல், நடனம் உள்ளிட்ட பல்வேறுவகையான வகுப்புகளுக்குச் சென்று திறன்களை வளர்த்துக்கொள்கிறார்கள். இவை மட்டுமல்லாமல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காக டியூசன் செல்பவர்கள் அதிகம். இதுபோன்ற பயிற்சிக்குச் செல்வதைவிடவும் இசைப் பயிற்சி மேற்கொள்ளும் குழந்தைகள்தான் பாடத்தில் அதிகமாகக் கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் இசையைப் படிக்க அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள். இசையைவிடவும் பள்ளி அல்லது கல்லூரிப் பாடங்களைப் படிக்க டியூசன் அனுப்பவே பெற்றோர்களும் விரும்புகிறார்கள். இசை வகுப்புக்குச் சென்றால் அவர்களால் பாடத்தில் அதிக கவனம் செலுத்தமுடியாது என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் இருப்பதுதான் அதற்குக் காரணம். ஆனால், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த எண்ணம் தவறானது என்பது புரியவந்திருக்கிறது. இசையில் ஆர்வமுள்ள மாணவர்கள்தான் மற்றவர்களைவிடவும் அதிக மதிப்பெண் பெற்று சிறந்துவிளங்குகிறார்கள். பள்ளிகளில் மட்டுமல்லாமல் கல்லூரிகளுக்குச் சென்றபிறகும் அவர்கள் மற்றவர்களைவிடவும் படிப்பில் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள்” என்று இந்த ஆய்வை மேற்கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் கூறியிருக்கிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.