மரணதண்டனை கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியானது !

போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.


இவர்களில் 8 முஸ்லிம்கள், 08 தமிழர்கள், 04 சிங்களவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர், தமிழர் மற்றும் முஸ்லிம் ஒருவர் ஆகியோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

இந்நிலையில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 20 பேர் கொண்ட பட்டியலை சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

அந்த பட்டியலுக்கு அமைய எம்.கே.பியதிலக்க, எம்.தர்மகரன், எம்.எஸ்.எம்.மஸ்தார், ஜே.ஏ.பூட், பி.ஜே.போல்சிம், எஸ்.புண்ணியமூர்த்தி, கே.எம்.சமிந்த, எஸ்.கணேசன், டபிள்யு.விநாயகமூர்த்தி, எஸ்.ஏ.சுரேஷ்குமார், எம்.குமார், எஸ்.மசார், டபிள்யு.ரங்க சம்பத் பொன்சேகா, எஸ்.முஹம்மது ஜான், பெருமாள் கணேசன், ஆர்.பி.சுனில் கருணாரத்ன, சையித் முகமது உவைஸ், எம்.எஸ்.எம்.மிஸ்வர், பி கமிலஸ் பிள்ளை, ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல் ஆகியோருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் நால்வரே முதற்கட்டமாக மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.