கரையோர மக்களுக்கு அறிவித்தல் !!

நாட்டின் கடலை அண்மித்த பகுதிகளில் பலத்த காற்று வீசுமென்பதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணைமாக கடலை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக்கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்  சீரான வானிலை நிலவும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.