கொழும்பில் ஆயுத தொழிற்சாலை - மிரட்சியில் பொலிஸார் !

கொழும்பில் இரகசியமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட ஆயுத தொழிற்சாலை ஒன்று பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


எல்பிட்டிய - நுகேகொட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கஜார் என்ற பெயரில் இந்த தொழிற்சாலை இயங்கியுள்ளது. இங்கு துப்பாக்கிகள் தயாரிக்கும் பொருட்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பந்தேகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராகும்.

காணொளியை பார்த்து எவ்வொரு துப்பாக்கியையும் வடிவமைக்கும் திறமை சந்தேக நபருக்கு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கணினி உதவியுடன் நவீன ரக துப்பாக்கிகளை பார்வையிட்டு தயாரித்துள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

பாடசாலை கல்வியை பெற்றிருக்காத சந்தேக நபர், கணினி பயன்பாடு மற்றும் துப்பாக்கி தயாரிப்பு தொடர்பில் அபார திறமை கொண்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.