"போதையை ஒழியடா " என்னும் குறும் திரைப்படம் வெளியிட்டு விழா!📷

மாவைக்கவி கலையகமும் இடைக்காடு குறும்பட சிற்பிகள் கூடமும் இணைந்து வழங்கும்.  " போதையை ஒழியடா "  என்னும் குறும் திரைப்படம் வெளியிட்டு விழா யாழ் செல்வா பலஸ் மண்டபத்தில் ஆம்பல் அரங்கத்தில் 05.06.2019 நடைபெற்றது.
இதில்  பிரதம விருந்தினராக  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ கயேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக. திரு. J.E பங்ராஸ் அதிபர் யாழ்/ மாதகல் சென் யோசப் ம.வி மற்றும் திரு. பொ.ஆறுமுகறஞ்சன் அதிபர் யாழ் / மாதகல் நுணசை ம.வி
திரு . இ.ஜோன்சன் கலாச்சார உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கோப்பாய் மற்றும் சிறப்பு உரையாற்றிய சட்டத்தரணி திரு .சுகாஸ் அவர்களும் சிறப்பு பிரதியை சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார் அதனை தொடர்ந்து குறும்பட விமர்சனத்தை ஆசிரியர் திரு .தீசன் திலிபன் அவர்கள் வழங்கினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.