"சிட்டிசன்" வாய்ப்பை மிஸ் பண்ணேன்-அபிதா!!
(-தாட்சாயணி-)
பாலாவின்
`சேது’ படத்தில் ‘அபித குஜலாம்பாள்’ கேரக்டர் மூலம் தனது பாந்தமான நடிப்பை
வழங்கி கவனம் ஈர்த்த அபிதாவுடன் பேசியதிலிருந்து...
நடிகை ஆனது எப்படி?
நான்
பிறந்து, வளர்ந்தது சென்னை திருவொற்றியூர். ஸ்கூல் படிச்சுக்கிட்டு
இருந்தப்போ எங்க வீட்டுக்குப் பக்கத்துல ‘நான்சி’னு ஒரு சீரியல் ஷூட்டிங்
நடந்துகிட்டிருந்தது. அதை நான் ஆர்வமா வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தேன்.
அப்போ எங்கிட்ட இருந்த துறுதுறுப்பையும் ஆர்வத்தையும் கவனிச்ச அந்த சீரியல்
டைரக்டர் என்னை அவங்களோட அடுத்த சீரியலான ‘கிரிமினல்ஸ்’ல தங்கை கேரக்டர்ல
நடிக்கக் கேட்டார், நானும் நடிச்சேன். அதுக்கப்புறம் ‘பிறந்த நாள்’ போன்ற
சில படங்கள்ல தங்கை ரோல், செகண்ட் ஹீரோயின் ரோல்ல நடிச்சேன்."
சேது’ வாய்ப்பு எப்படி வந்தது?
இப்படிச் சின்னச் சின்ன ரோல்லநடிச்சுக்கிட்டிருந்தப்போ, எங்கேயோ யதார்த்தமா என் போட்டோவைப் பார்த்த பாலா சார், என்னை ஆடிஷனுக்குக் கூப்பிட்டார். சில சீன்களைச் சொல்லி நடிக்கச் சொன்னாங்க, நானும் நடிச்சுக் காட்டினேன். கூடவே ‘சேது’வுல வர்ற ‘சரணம் பவா’ பாட்டையும் போட்டு நடிச்சுக்காட்டச் சொன்னாங்க. டெஸ்ட் ஷூட்டும் நடந்தது. ஆனா, ‘ஸாரி' சொல்லி அனுப்பி வெச்சுட்டார், பாலா சார். ‘சரி, இந்த வாய்ப்பு நமக்கில்ல'னு மனசைத் தேத்திக்கிட்டேன்.
இப்படிச் சின்னச் சின்ன ரோல்லநடிச்சுக்கிட்டிருந்தப்போ, எங்கேயோ யதார்த்தமா என் போட்டோவைப் பார்த்த பாலா சார், என்னை ஆடிஷனுக்குக் கூப்பிட்டார். சில சீன்களைச் சொல்லி நடிக்கச் சொன்னாங்க, நானும் நடிச்சுக் காட்டினேன். கூடவே ‘சேது’வுல வர்ற ‘சரணம் பவா’ பாட்டையும் போட்டு நடிச்சுக்காட்டச் சொன்னாங்க. டெஸ்ட் ஷூட்டும் நடந்தது. ஆனா, ‘ஸாரி' சொல்லி அனுப்பி வெச்சுட்டார், பாலா சார். ‘சரி, இந்த வாய்ப்பு நமக்கில்ல'னு மனசைத் தேத்திக்கிட்டேன்.
இந்தப்
படத்துல முதல்ல கீர்த்தி ரெட்டிங்கிற நடிகை நடிக்கிறதா இருந்தாங்க. பிறகு,
சிந்துஜா மேனன்ங்கிற மலையாள நடிகை கமிட் ஆனாங்க. ஆனா, பாலா சார் என்ன
நினைச்சாரோ தெரியல. திரும்ப என்னைக் கூப்பிட்டு 'நீயே நடி'னு சொன்னாங்க.
பாலா சார், ‘நீதான்மா இந்தக் கேரக்டருக்கு சரியா இருப்ப'னு சொன்னது,
இப்போவரைக்கும் நல்லா ஞாபகத்துல இருக்கு. யார் யாருக்கோ கை மாறி, கடைசியில
எனக்கே அந்த வாய்ப்பு வந்தது, மறக்க முடியாதது."
``உங்களை வெச்சு முதல்ல எந்தக் காட்சியைப் படமாக்குனாங்க?"
``படத்தைக்
‘கான கருங்குயிலே’ பாட்டுல இருந்துதான் ஷூட் பண்ணாங்க. அந்த ஒரு வாரமும்
எனக்கு எந்த வேலையும் இல்லை. தினமும் ஸ்பாட்டுக்குப் போய் சும்மா வேடிக்கை
பார்த்துக்கிட்டிருப்பேன். அதுக்கப்புறம்தான் ‘மயிலிறகு’ காட்சியைப்
படமாக்குனாங்க. தொடர்ந்து வரிசையா காதல் காட்சிகளையெல்லாம் ஷூட் பண்ணாங்க.
என்னைக் கடத்திட்டுப் போய் விக்ரம் காதலைச் சொல்ற காட்சியை மட்டும் நாலு
நாள் எடுத்தாங்க.
பொதுவா ஒவ்வொரு காட்சியை எடுத்து முடிச்சதும், பாலா சார் போட்டுப் பார்ப்பார். அப்போ அவர்கிட்ட, 'எப்படி நடிச்சிருக்கேன் சார்'னு கேட்டுக்கிட்டே இருப்பேன்; அவர் 'ம்ம்.. நல்லாயிருக்குமா'னு சொல்லிட்டுப் போயிடுவார். ஆனா, இந்தக் காட்சியைப் பார்த்துட்டு, 'சாவித்திரியே தோத்துட்டாங்க போ'னு சொன்னார். சந்தோஷத்துல எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. ஏன்னா, பாலா சார் வாயில இருந்து அப்படி ஒரு வார்த்தை வர்றது அபூர்வம்."
பொதுவா ஒவ்வொரு காட்சியை எடுத்து முடிச்சதும், பாலா சார் போட்டுப் பார்ப்பார். அப்போ அவர்கிட்ட, 'எப்படி நடிச்சிருக்கேன் சார்'னு கேட்டுக்கிட்டே இருப்பேன்; அவர் 'ம்ம்.. நல்லாயிருக்குமா'னு சொல்லிட்டுப் போயிடுவார். ஆனா, இந்தக் காட்சியைப் பார்த்துட்டு, 'சாவித்திரியே தோத்துட்டாங்க போ'னு சொன்னார். சந்தோஷத்துல எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. ஏன்னா, பாலா சார் வாயில இருந்து அப்படி ஒரு வார்த்தை வர்றது அபூர்வம்."
கருத்துகள் இல்லை