யாழ் உடுவில் கிராம அலுவலர் காரியாலய வீட்டில் விபச்சார விடுதி!

சுன்ணாகம் உடுவில் கிழக்கு கிராம அலுவகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் தென்னிலங்கையை சேர்ந்த நபர்கள் விபச்சார விடுதி நடத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் அந்த வீட்டில் தங்கியிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட்ட நால்வர், இன்று இளம் பெண் ஒருவரைக் கடத்த முற்பட்டுள்ளனர்.

அவர்கலிடமிருந்து தப்பித்த இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸார், ஒருவரைக் கைது செய்துள்ள நிலையில் . 2 பெண்கள் உள்பட மூவர் தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

உடுவில் கிழக்கு (184) கிராம அலுவலர் அலுவலகம் இயங்கும் வீட்டில் கடந்த ஒரு மாத காலமாக அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் அலுவலகம் ஒன்று இயங்கிவந்துள்ளது.

அங்கு நுகேகொட மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மற்றும் 2 இளம் பெண்களும் தங்கியிருந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் நடவடிக்கையை ஆராய்ந்த உடுவில் கிழக்கு பெண் கிராம அலுவலகர், அவர்களிடம் நிறுவனம் தொடர்பான பதிவைக் கேட்டபோது, பொலிஸாருக்கு தமது நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.



இதன் காரணமாக இந்த விடயம் உடுவில் பிரதேச செயலரின் கவனத்துக்க தன்னால் கொண்டு செல்லப்பட்டதாக உடுவில் கிழக்கு கிராம அலுவலகர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை உடுவில் அம்பலவாணர் வீதியில் பயணித்த இளம் பெண் ஒருவரை குறித்த கடத்திச்செல்ல முற்பட்டவேளை தப்பித்த அந்த இளம் பெண், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.

எனினும் பொலிஸாரின் வருகையை அறிந்தது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பித்துள்ள நிலையில் நுகேகொடையைச் சேர்ந்த ஆண் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை குறித்த விபச்சார விடுதி தொடர்பில் அந்த வீட்டின் உரிமையாளர் உள்பட அனைவரையும் கைது செய்யவேண்டும் என சுன்னாகம் பொலிஸாரிடம் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.