தெ.ஆப்பிரிக்க அணியில் மாற்றம்: இந்தியாவுக்கு சாதகமாகுமா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விலகியுள்ளார்.

மே 30ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் இங்கிலாந்துடன் மோதியது. முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தாலும் வங்க தேசத்துக்கு எதிரான அடுத்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது. ஆனால் அந்தப் போட்டியிலும் தோல்வியே மிஞ்சியது.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டேல் ஸ்டெய்ன் முதல் இரு ஆட்டங்களில் விளையாடவில்லை. இது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ஒட்டைஸ் கிப்சன், “உடற்தகுதி உள்ள வீரர்களைக் கொண்டுதான் ஆட முடியும். டேல் ஸ்டெய்ன் ஒவ்வொரு நாளும் ஆடும் நிலைக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறார், அவர் 85% ஃபிட்; பவுலிங் செய்கிறார், ஆனால் 85% உடற்தகுதி உடைய ஒருவரை அணியில் சேர்ப்பது, அதுவும் இந்தியாவுக்கு எதிராகச் சேர்ப்பது சரியாக இருக்குமா என்பது தெரியவில்லை.

ஒருநாள் கிரிக்கெட்டில் டேல் ஸ்டெய்னின் சாதனைகள் இன்னமும் நன்றாகவே உள்ளன. உடற்தகுதி முழுமை பெற்ற டேல் ஸ்டெய்னை எந்த அணியும் இழக்க விரும்பாது, ஏனெனில் உடற்தகுதியுடன் கூடிய டேல் ஸ்டெய்ன் எதிரணியினரை கடும் சேதங்களுக்குள்ளாக்குவார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டெய்ன் களமிறங்கி அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் குணமாகாததால் உலகக் கோப்பை தொடரிலிருந்து ஸ்டெய்ன் விலகியுள்ளார். இதையடுத்து ஸ்டெய்னுக்குப் பதிலாக இடக்கை வேகப்பந்துவீச்சாளர் பெரன் ஹெண்ட்ரிக்ஸ் தென் ஆப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் கட்டாய வெற்றியை எதிர்பார்த்து அந்த அணி நாளை இந்தியாவுடனான போட்டியில் களமிறங்கவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.