வாழ்வின் முக்கியமான தருணம்! மீண்டு வருவாரா கோமதி மாரிமுத்து!
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள தொடரின் மகளிர் 800மீஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று தமிழகதத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார். போட்டிக்குப் பின் வழக்கமான, ஊக்கமருந்து பரிசோதனை கோமதிக்கும் நடத்தப்பட்டது.
முதல் கட்டமான ‘ஏ’ மாதிரி சோதனையில் நான்ட்ரோலன் என்கிற ஸ்டீராய்டு மருந்தை கோமதி உட்கொண்டு போட்டியில் பங்கேற்றிருப்பதாக தெரியவந்ததையடுத்து அவருக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த கோமதி, சோதனையின் அடுத்தகட்டமான பி மாதிரிக்காக கத்தார் சென்றுள்ளார். இந்நிலையில் புகார்கள்குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கோமதி, "ஏதேதோ பெயர்களில் ஊக்க மருந்து இருப்பதாக குறிப்பிடுவதாகவும் ஆனால் தனக்கு ஊக்கமருந்து என்றால் என்னவென்றே தெரியாது எனவும்,அந்த பெயர்களை எல்லாம் தான் கேள்விபட்டதே இல்லை, எனவும், “பி” மாதிரி சோதனையில் வெற்றி பெற்று, தன்மேல் குற்றமில்லை என்பதை நிருபிக்கும்வரை ஓயப்போவதில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
”ஏ” மற்றும் “பி” மாதிரி சோதனைகள் இரண்டுமே ஒரே அடிப்படை சோதனைதான்.இரண்டு முடிவுகளும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் இருக்கும்.மாற்றம் ஏதும் ஏற்படாது.”ஏ” மாதிரி சோதனையில் குளறுபடி ஏதேனும் இருந்தால் “பி” மாதிரி சோதனை சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
முதல் கட்டமான ‘ஏ’ மாதிரி சோதனையில் நான்ட்ரோலன் என்கிற ஸ்டீராய்டு மருந்தை கோமதி உட்கொண்டு போட்டியில் பங்கேற்றிருப்பதாக தெரியவந்ததையடுத்து அவருக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த கோமதி, சோதனையின் அடுத்தகட்டமான பி மாதிரிக்காக கத்தார் சென்றுள்ளார். இந்நிலையில் புகார்கள்குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கோமதி, "ஏதேதோ பெயர்களில் ஊக்க மருந்து இருப்பதாக குறிப்பிடுவதாகவும் ஆனால் தனக்கு ஊக்கமருந்து என்றால் என்னவென்றே தெரியாது எனவும்,அந்த பெயர்களை எல்லாம் தான் கேள்விபட்டதே இல்லை, எனவும், “பி” மாதிரி சோதனையில் வெற்றி பெற்று, தன்மேல் குற்றமில்லை என்பதை நிருபிக்கும்வரை ஓயப்போவதில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
”ஏ” மற்றும் “பி” மாதிரி சோதனைகள் இரண்டுமே ஒரே அடிப்படை சோதனைதான்.இரண்டு முடிவுகளும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் இருக்கும்.மாற்றம் ஏதும் ஏற்படாது.”ஏ” மாதிரி சோதனையில் குளறுபடி ஏதேனும் இருந்தால் “பி” மாதிரி சோதனை சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை