அர­சியல் கட்சி செய­லா­ளர்­க­ளுக்கும் இடை­யி­ல் இன்று முக்­கிய சந்­திப்பு!!

சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­வுக்கும்  அர­சியல் கட்சி செய­லா­ளர்­க­ளுக்கும் இடை­யி­லான  முக்­கிய சந்­திப்பு இன்று பிற்பகல் 2.30 மணி­ய­ளவில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவில் இடம்­பெ­ற­வுள்­ளது.

காலம் தாழ்த்­தப்­பட்டு வரு­கின்ற மாகாண சபைத் தேர்­தல்கள் மற்றும் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் என்­பன குறித்து இந்த சந்­திப்பில் விஷேட கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இந்த சந்­திப்பு தொடர்பில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் சட்ட பணிப்­பாளர் நிமல் புஞ்­சி­ஹேவா தெரி­விக்­கையில்,

சந்­திப்­பிற்கு சகல கட்­சி­க­ளி­னதும் செய­லா­ளர்­க­ளுக்கும் கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள அதேவேளை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரி­களும் கலந்துகொள்­ள­வுள்­ளனர்.

மாகாண சபை­க­ளுக்­கான ஆயுட்­காலம் நிறை­வ­டைந்து ஒரு வரு­டத்தைக் கடந்­துள்­ளது. அத்­தோடு அண்­மையில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களைக் காரணம் காட்டி மாகாண சபைத் தேர்­தல்­களை மேலும் காலம் தாழ்த்­து­வ­தற்­கான முயற்­சிகள் இடம்­பெ­றலாம். இது குறித்து கவனம் செலுத்­தி­யுள்ள தேர்­தல்கள் ஆணைக்­குழு கட்சி செய­லா­ளர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்­களை அழைத்து கலந்­து­ரை­யாட தீர்­மா­னித்­துள்­ளது. இந்த தேர்­தல்­களை நடத்­து­வதில் காணப்­ப­டு­கின்ற சட்ட சிக்­கல்கள் குறித்தும் இதன்போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் அனைத்து பிர­தேச செய­ல­கங்­க­ளுக்­கூ­டாக வாக்­காளர் பெயர்­பட்­டியல் மீள்­தி­ருத்தம் தொடர்பில் கவனம் செலுத்­தப்­படும். அதா­வது வாக்­கா­ளர்­களை பதிவு செய்­வதில் பாரிய சிக்­கல்கள் உள்­ளன. எனவே இதி­லுள்ள நெருக்­க­டி­களைக் குறைத்துக் கொள்­வ­தற்­காக கட்­சி­க­ளிடம் உத­விகள் கோரப்­ப­ட­வுள்­ளன. அதா­வது ஒவ்­வொரு கட்­சிக்கும் உரிய தொகு­திகள் மூலம் இவ்­வாறு உதவி கோரு­வ­தற்கு எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அத்­தோடு மாகாண சபைகள் அமைத்தல் தொடர்­பிலும் சில பிரச்­சி­னைகள் உள்­ளன. இது குறித்தும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. 

 அரச அதி­கா­ரிகள் வாக்­க­ளிக்கும் தபால் வாக்கு முறைமை விஸ்­த­ரிக்­கப்­பட வேண்­டி­யது தற்­போது அவ­சி­ய­மா­கி­யுள்­ளது. அதா­வது அரச திணைக்­க­ளங்­களில் பணி­பு­ரி­ப­வர்கள் மற்றும் வைத்­தி­யத்­துறை சார்ந்­த­வர்­களை கருத்திற்கொண்டு இந்த விட­யத்தில் கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.

தேர்­தல்கள் நடை­பெறும் காலங்­களில் இடம்­பெறும் மோச­டி­களை கண்­கா­ணிப்­ப­தற்கு பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் அதில் திருப்­தி­யற்ற நிலைமை உள்­ளது. எனவே வாக்­க­ளிப்பின் போது தேர்தல் ஆணைக்­குழு அதி­கா­ரிகள் பொலி­ஸா­ருடன் இணைந்து நேரடி கண்­கா­ணிப்பில் ஈடு­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று அர­சாங்கத்திடம் கோரிக்கை முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இது குறித்தும் கட்சி செய­லா­ளர்­களின் அபிப்­பி­ரா­யங்கள் பெறப்­படும்.

பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறித்து பர­வ­லாகப் பேசப்­பட்­டாலும் அது நடை­மு­றையில் சாத்­தி­யப்­ப­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை. எனவே எதிர்­வரும் காலங்­களில் இடம்­பெ­ற­வுள்ள தேர்­தல்­களில் நூற்­றுக்கு 25 வீதம் பெண் பிர­தி­நி­தித்­துவம் கட்­டா­யப்­ப­டுத்­த­ப்பட வேண்டும் என்­ப­தோடு, இதற்கு சகல அர­சியல் கட்­சி­களும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு கட்டளை பிறப்பிக்கப்படுமாக இருந்தால் அதனை நடத்த முடியும் என்று தெரிவித்திருந்தார். இந்த விடயம் குறித்தும் கட்சிகளின் நிலைப்பாடுகள் பெறப்படவுள்ளதோடு, தேர்தலுக்கான செலவீனங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்படவுள்ளது என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.