மரநடுகையும், கலந்துரையாடலும்!!

இயற்கையின் ஆதாரமாகவுள்ள மரங்களை பல தலைமுறையாக பேணிப்பாதுகாப்பதுடன் அவற்றின் பயன்களை எமது இளைய சமுதாயம் நுகர்வதற்கான வழிவகைகளை செய்ய வேண்டியதும் நமது தலையாய கடமையாகும். ஏரிக்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் வியாபித்து நிற்கும் மரங்கள் இயற்கை சூழலை உருவாக்குவதோடன்றி நீர்ச் சமனிலையை பேணுவதற்கும் மண்ணரிப்பை தடுக்கும்  அரணாகவும் உதவி புரிகின்றது.
குளங்களை, ஏரிகளை சுற்றி மரம் நடுவதற்கான தேவைப்பாடுகளாக மழைக்கால வெள்ள நீரோட்டத்தின் அளவை கட்டுப்படுத்த முடிவதுடன் , ஆற்றுப்படுக்கைகளில் உள்ள மண் வெளியேறுவதும் தடுக்கப்படும்.

எதிர்வரும் சனிக்கிழமை (29.06.2019) காலை 8 மணிக்கு சாவகச்சேரி சின்ன இல்வாரைக்குளத்தில் "மரநடுகையையும், கலந்துரையாடலும்" செயற்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். அனைவரையும் இச்செயற்பாட்டில் பங்குபற்றி உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு அழைக்கிறோம்.

-பசுமைச் சுவடுகள்-

தொடர்புகளுக்கு - 0762073333 / 0776385805

Poster designed by :- Pratheep kunaratnam

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.