பதவிவிலகிய ஆளுனர்களை பாராட்டிய மறவன்புலவு க.சச்சிதானந்தன்!!

அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தையும், பதவிவிலகிய ஆளுனர்களின் முடிவையும் பாராட்டி மறவன்புலவு க.சச்சிதானந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இலங்கை மண்ணின் மரபுகளை காக்கக் காலவரையற்ற உண்ணா நோன்பு கைக்கொள்ளும் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியமையைப் பாராட்டுகிறேன்.

அதோடு கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்களின் நெடு நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அரசாங்கத்தினை பாராட்டுகிறேன்.

மேதகு குடியரசுத் தலைவரின் பணியை எளிதாக்கிக் கொப்பளிக்கும் உணர்ச்சிகளுக்கு அணை கட்டினார்கள். ஆளுநர்களாக இருந்த திரு அலி, திரு இசுபுல்லர் இருவரும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் நடவடிக்கையாகத் தங்கள் பதவிகளை விட்டு கொடுத்ததைப் பாராட்டுகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் எஞ்சிய கோரிக்கைகளையும் அரசாங்கம் நிறைவேற்றி மீண்டும் நாட்டையும் மக்களையும் வளர்ச்சிப் பாதையில் திசைதிருப்பிச் செல்வமும் செழிப்பும் மிக்க நாடாக இலங்கையை மாற்ற இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் அன்பும் அருளும் அறனும் நிலைக்க வேண்டுகிறேன் எனவும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.