தொழிலுக்கு துரோகம் செய்தவர் வடிவேலு!!

சிரிப்பு நாயகன், சாமானியனையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைகைப்புயல் வடிவேலு மீது கடந்த சில நாட்களாக தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.


அண்மையில் நேசமணி ஹேஷ்டேக் ட்ரெண்டானதையடுத்து ஒரு செய்தி தொலைக்காட்சி வடிவேலுவிடம் பேட்டி எடுத்தது. அதில் என்னை அழிக்கிறது தயாரிப்பாளர் சங்கத்துல இருக்குறவங்க மற்றும் தயாரிப்பாளர் சிவாமற்றும் இயக்குநர் சங்கர் தான் என வடிவேலு பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

வடிவேலு ஹீரோவா நடிச்சு ஓடிய ஒரே படம், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' மட்டும்தான். அதன் படைப்பாளி, சிம்புதேவன். அந்த இயக்குநரைப் பேட்டிகளில் வடிவேலு ஒருமையில் பேசி கொச்சைப்படுத்தினார். வடிவேலுக்காக பேசிய தயாரிப்பாளர் சங்கத்தை பஜ்ஜி போன்டா சாப்பிட்டுவிட்டு கட்ட பஞ்சாயத்து நடத்துற சங்கம் என விமர்சித்தார்.

இதுகுறித்து அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சிவாவிடம் கேட்டபோது, “வடிவேலு தொழிலுக்கு துரோகம் செய்துவிட்டார். தயாரிப்பாளர் சங்கத்தை பற்றி விமர்சித்தது தவறு. இயக்குநர் சங்கரை ஒருமையில் பேசியது தவறு. நிறைய தயாரிப்பாளரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர் வடிவேலு. தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது 16 பக்கங்கள் அளவிற்கு புகார்கள் உள்ளன. இதனை மக்கள் மத்தியில் சொன்னால் அவர் மீதுள்ள மதிப்பு போய்விடும்” என கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.