சட்டவிரோதமாக தாய்லாந்திற்குள் பிரவேசித்த மியன்மார் குடியேற்றவாசிகள் கைது!

தாய்லாந்தின் மே ஹோங் சன் மாகாணத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 6 மியன்மார் குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அவர்களை கடத்தி வந்த 36 வயதான தாய்லாந்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு சக்கர வாகனத்தில் கடத்தல் சந்தேக நபர் சென்றுக்கொண்டிருந்த பொழுது, அவருடன் பயணித்த மியன்மார் நாட்டவர்கள் முறையான ஆவணங்களை வழங்காததன் மூலம் இந்த கடத்தல் சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இதன்போது, கைது செய்யப்பட்ட தாய்லாந்து நபர் மீது ஆட்கடத்தல் வழக்கும், 6 மியன்மார் நாட்டவர்கள் மீதும் சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழைந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கையின் பின்னர், மியன்மார் குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன், தாய்லாந்தில் பரவலாக சுமார் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் உட்பட 500 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.