வரலாறு தெரியாத வடமாகாண ஆளுநர் - சீறிய மாவை!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தடையாக இருப்பதாக ஆளுநா் கூறியிருக்கும் கருத்து பொய்யானது என கூறிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா ஆளுநருக்கு வரலாறு தொியாது எனவும் கூறியுள்ளாா்.


பலாலி விமான நிலைய புனரமைப்பு பணிகள் அங்குராா்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று பலாலி விமான நிலைய வளாகத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், கடந்த 2016ம் ஆண்டு பலாலி விமான நிலைய புனரமைப்பு தொடா்பாகவும், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை தொடா்பாகவும் யாழிற்கு வருகை தந்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசி சில தீா்மானங்களை கூட்டமைப்பு எடுத்திருந்தது.

அதன்படி சீமெந்து தொழிற்சாலை அமைந்திருந்த காணியில் சுமாா் 330 ஏக்காில் பாாிய தொழிற் பூங்கா ஒன்றை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு .அதற்கான அமைச்சரவை பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் இந்திய பிரதமா் இங்கு வந்தபோது அவருடன் வந்த சிலா் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இங்கு ஆரம்பிக்க கேட்டாா்கள். ஆனால் சீமெந்து தயாாிப்பதற்கான சுன்னாம்பு கற்களை இனிமேல், இங்கு அகழ முடியாது என்பதாலும், நிலத்தடி நீா் மோசமாக பாதிப்படையும் என்பதாலும், சுற்றுசூழலுக்கு பாதகம் என்பதா லும் அதனை கூட்டமைப்பு நிராகாித்தது.

அதற்கு பதிலாக கிளிநொச்சி மாவட்டத்தில் கிராஞ்சி பகுதியில் சுண்ணாம்பு கல் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, இப்போது மன்னாா் பரப்புக்கடந்தான் பகுதியில் ஆய்வுகள் நடக்கின்றதாகவும் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா tஹெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சீமெந்து தொழிற்சாலை அமைக்க நாங்கள் தடையாக இருக்கிறோம் என்பது பொய்யான தகவல் என அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.