ட்ரம்ப் – இம்ரான்கான் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியானது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிற்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சு இதுகுறித்த உத்தியோகப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் மீது, அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை என கருதிய அமெரிக்கா, பாகிஸ்தானிற்கு வழங்கி வந்த பயங்கரவாத ஒழிப்பு நிதி உதவியை நிறுத்தியது.

பொய்களையும், வஞ்சகங்களையும் தவிர வேறொன்றையும் பாகிஸ்தான் வழங்கவில்லை என டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எதிர்வரும் 20-ம் திகதி அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின்போது முதல் முறையாக அவர் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ட்ரம்ப்பை எதிர்வரும் 22ஆம் திகதி சந்தித்து பேசவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல், ‘பிரதமர் இம்ரான்கான் இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார்.

அங்கு ட்ரம்ப்பை எதிர்வரும் 22ஆம் திகதி சந்தித்து பேசவுள்ளார். இருவரது சந்திப்பும் முதல் முறையாக நடைபெறவுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.