ரயில்வே ஊழியர்களுக்கு அர்ஜுன எச்சரிக்கை!!

ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம்  நிறைவேற்றும். ஆகையால் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாமென  போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அர்ஜுன ரணதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகையால் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எதனையும் மீண்டும் செய்ய வேண்டாமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளதென அர்ஜுன ரணதுங்க மேலும் கூறினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.