இராணுவத்தின் களியாட்ட நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!!📷

சிங்கள இராணுவத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இடம்பெறவுள்ள களியாட்ட நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் வவுனியாவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக தொடர்ந்து 868 நாள்களாக போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் கந்தசாமி கோவில்வீதி வழியாக மணிக்கூட்டு கோபுரசந்தியை அடைந்து அங்கிருந்து கண்டிவீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை ஊர்வலமாகச் சென்றடைந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.