பொங்கிய கூட்டமைப்பார்த்து பொங்கிய மக்கள்!!

தமிழ்தேசியக்கூட்டமைப்பு வடக்கு கிழக்கு பகுதிகுயில் ஆயிரம் விகாரைகள் அமைப்பதற்கு இரண்டாயிரத்தி தொழாயிரம் மில்லியன் ரூபாய் வரவு செலவுத்திட்ட்தில் இடம்பெற்றுள்ளமைக்கு அனுமதி கொடுத்துவிட்டு பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் பொங்குகின்றார்கள் இதுதான் இவர்களின் உண்மை நிலையா என முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.


ஸ்ரீலங்கா அரசிற்கு ஒருமுகத்தினையும் தமிழ்மக்களுக்கு ஒருமுகத்தினையும் காட்டி நாடகமாடும் செயற்பாட்டில் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்

ஸ்ரீலங்கா அரசின் வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆயிரம் விகாரைகள் அமைப்பதற்கு 2900 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு ஆதரவு தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பௌத்த விகாரை அத்துமீறல் தொடர்பான நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் 06.07.19 நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து பொங்கி மகிழ்ந்துள்ளார்கள்.

மாவைசேனாதிராசா,சாந்தி சிறீஸ்கந்தராச,சிவமோகன் உள்ளிட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முதன்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கி மகிழ்ந்துள்ளார்கள்.

மறுபுறத்தில் பௌத்த மயமாக்கலுக்கு அரசுடன் இணைந்து அசரிற்கு ஆதரவாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் இவர்களால் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுக்தரமுடியாது என முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

கூட்டமைப்பினரின் இவ்வாறான நடிப்பு செயற்பாடுகளால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்படப்போவது மக்கள்தான் அவர்கள் சுகபோக வாழ்க்கையினை அனுபவதித்து அரசிற்கு முண்டுகொடுத்து வருகின்றார்கள் ஒருபக்கத்தில் தமிழர்களுக்க ஒருமுகத்தினையும் மறுபக்கத்தில் சிங்களஅரசிற்கு இன்னொரு முகத்தினையும் கூட்டமைப்பினர் காட்டிவருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.