சஹ்ரானின் சகா விமான நிலையத்தில் அதிரடியாகக் கைது!!

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அன்ஸார் மொகமட் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
நாட்டை விட்டுத் தப்பிக்க முயன்றபோது நேற்றுமுன்தினம் காலை அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலை வரும் ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யுமான சஹ்ரான் காசிம் உள்பட 36 பேர் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் முகாம் ஒன்றை நுவரெலியா பொலிஸார் கடந்த மே மாதம் கண்டு பிடித்தனர்.

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட ருவான்எளிய தர்மபாலபுர என்ற இடத்திலுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடத்தைப் பொலிஸாரும் சிறப்பு அதிரடிப் படையினரும் சுற்றிவளைத்தனர்.

அதன்போது சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை யில் அன்ஸார் மொகமட் என்பவர் அந்தப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று தலைமறை வாகியிருந்தார் என்று பொலிஸாரால் தெரிவிக் கப்பட்டது. இந்த நிலையில் சையின் அன்ஸார் மொக மட் ரிசான் என்ற அந்த சந்தேகநபர் நேற்று முன்தினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.