பாகிஸ்தானில் பேருந்து விபத்து!!

பாகிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர்.


பாகிஸ்தானின் ஸ்வாத் நகரில் இருந்து லாகூர் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்று(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஹசன் அப்தால், டெக்சிலா, வாஹ் ஆகிய பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்திருந்ததுடன், 60 பேர் காயமடைந்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.