ஈராக்கில் இராணுவத் தாக்குதலில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் உயிரிழப்பு!

ஈராக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 11 ஐ.எஸ் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார்.

எனினும், அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. அவர்களை ஒடுக்கும் வகையில் ஈராக் இராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறனர்.

இந்நிலையில், ஈராக்கில் சிறப்பு அதிரடிப்படையினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்கள், ‘ஈராக்கில் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர். 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் 100 இற்கும் மேற்பட்டவை அழிக்கப்பட்டன. அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 54 வெடிமருந்து கிடங்குகள் அழிக்கப்பட்டன’ என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.