நிலத்தடிக்கு வந்த நீரால் மக்கள் பதற்றம்!!

தென்னிலங்கையில் திடீரென கடல் நீர் நிலப்பரப்பிற்குள் வந்தமையினால் அந்தப் பகுதிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.


அம்பலங்கொட, கஹவ பிரதேசத்தில் இருந்து கொடகம வரை ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு கடல் நீர் தரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக காலி - கொழும்பு பிரதான வீதிக்கு கல் மற்றும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்றையதினம் கடல் மிகவும் கொந்தளிப்பு நிலையில் காணப்படும் என வளிமண்டவியல் திணைக்களம் நேற்று எச்சரித்திருந்தது.

இதன் காரணமாக கடல் நீர் தரைக்கு வந்திருக்கலாம் எனவும், அடிக்கடி இந்த பகுதியில் கடல் நீர் தரைக்கு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.