விவசாய நிலத்தில் கண்ணி வெடிகள் மீட்பு - வவுனியாவில் சம்பவம்!

வவுனியா-ஓமந்தை பழைய முகாமிற்கு அருகில் உள்ள காணி ஒன்றிலிருந்து ஒருதொகை கண்ணி வெடிகள் வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த காணியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விவசாய வேலைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோதே, குறித்த வெடிகுண்டுகள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அனைத்து கண்ணி வெடிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

அத்தோடு, குறித்த பகுதியில் மேலும் வெடி பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளனவா என தேடுதல் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.