இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார் ரணில்!!

யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க  சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுக்காக வருகைதந்த போது முதல் முறையாக ஆயுதம் தாங்கிய மாணவர் சிப்பாய் படையணியில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.


ஸ்கந்தவரோதயா பாடசாலையின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் சிறப்பு அதிதியாகக்  கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த பிரதமருக்கு பாடசாலை நுழைவாயிலில் வைத்து தமிழ் கலாசார முறைப்படி ஆராத்தி எடுத்து வரவேற்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொன்னாடையும் அணிவித்து பிரதமருக்கான கௌரவம் கொடுக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இல்லாத நடமுறையாக தமிழ் மாணவர்களின் ஆயுதம் தாங்கிய அணிவகுப்பு மரியாதை பிரதமருக்கு வழங்கப்பட்டது.

இவ் அணிவகுப்பு மரியாதையினை இராணுவத்தால் பயிற்சி வழங்கப்பட்ட “மாணவ சிப்பாய் படையணி” (கடேற்) அணியினர் வழங்கியிருந்தனர்.

சிங்கள மொழியில் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு (கொமான்டிங்) அமைய தமிழ் மாணவர்கள் இவ் அணிவகுப்பு மரியாதையினை பிரதமருக்கு வழங்கியிருந்தார்கள்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.