யாழிற்கு பயணிகளோடு உடன் வந்தது கஞ்சா!!

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வாகனமொன்றிலிருந்து ஒரு தொகுதி கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கல்கமுவ பகுதியிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) வாகனம் ஒன்றில் சிலர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்றுள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே, குறித்த வாகனத்திலிருந்து 4கிலோ 400கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், குறித்த நபர் வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் வன்னிநாயக்க எனும் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் சாவகச்சேரி பொலிஸார், கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.