நள்ளிரவு முதல் அமுலாகும் விலை அதிகரிப்பு!!

இலங்கையில் இன்றைய தினம் நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை நேற்றைய தினம் முதல் 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த போதும் விலை அதிகரிப்பிற்கான காரணம் என்னவென தெரிவிக்கப்படவில்லை.

இதனையடுத்து பாண், பனிஸ் உட்பட கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.