மொடல் அழகி ஒருவருக்கு 100 மணி நேரம் சமூக சேவை தண்டனை!
அவுஸ்ரேலியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகியான அடவ் மார்ன்யங்கிற்கு 100 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும் என நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் தற்போது வசிக்கும் குறித்த மொடல் அழகி, போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் அவுஸ்திரேலியாவில் குடியேறினார்.
இவர், 2017ஆம் ஆண்டு உலக அழகி இறுதி போட்டியில் அவுஸ்ரேலியாவின் சார்பில் பங்கேற்றார். அத்துடன் தனது பருவ வயதில் தான் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானது குறித்தும், அதன் கொடுமைகள் குறித்தும் ‘பேஸ்புக்’ நேரலையில் பதிவிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து மேலும் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி, அடவ் மார்ன்யங், மெல்பர்னில் இருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு விமானத்தில் பயணித்தார்.
அப்போது அவர் அதீத மதுபோதையில் சக பயணிகளுடன் முறுகலில் ஈடுபட்டதோடு, விமான ஊழியர்களை தாக்கி, ஆபாசமாக நடந்துகொண்டார்.
இது தொடர்பாக அடவ் மார்ன்யங் மீது வழக்கு தொடரப்பட்டு லொஸ் ஏஞ்சலீஸ் நகர நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக அடவ் மார்ன்யங் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அப்போது, அவர் மதுபோதையால் தன் சுய குணாதிசயங்களை இழந்து, மிக மோசமாக நடந்துகொண்டதாக கண்ணீர் மல்க கூறி வருத்தம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, அவருக்கு 100 மணி நேர சமூக சேவை, 3 ஆண்டுகள் நன்னடத்தை சோதனைக் கண்காணிப்பு மற்றும் குடிபோதையில் இருந்து மீள்வதற்கான ஆலோசனையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
அவுஸ்ரேலியாவில் தற்போது வசிக்கும் குறித்த மொடல் அழகி, போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் அவுஸ்திரேலியாவில் குடியேறினார்.
இவர், 2017ஆம் ஆண்டு உலக அழகி இறுதி போட்டியில் அவுஸ்ரேலியாவின் சார்பில் பங்கேற்றார். அத்துடன் தனது பருவ வயதில் தான் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானது குறித்தும், அதன் கொடுமைகள் குறித்தும் ‘பேஸ்புக்’ நேரலையில் பதிவிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து மேலும் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி, அடவ் மார்ன்யங், மெல்பர்னில் இருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு விமானத்தில் பயணித்தார்.
அப்போது அவர் அதீத மதுபோதையில் சக பயணிகளுடன் முறுகலில் ஈடுபட்டதோடு, விமான ஊழியர்களை தாக்கி, ஆபாசமாக நடந்துகொண்டார்.
இது தொடர்பாக அடவ் மார்ன்யங் மீது வழக்கு தொடரப்பட்டு லொஸ் ஏஞ்சலீஸ் நகர நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக அடவ் மார்ன்யங் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அப்போது, அவர் மதுபோதையால் தன் சுய குணாதிசயங்களை இழந்து, மிக மோசமாக நடந்துகொண்டதாக கண்ணீர் மல்க கூறி வருத்தம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, அவருக்கு 100 மணி நேர சமூக சேவை, 3 ஆண்டுகள் நன்னடத்தை சோதனைக் கண்காணிப்பு மற்றும் குடிபோதையில் இருந்து மீள்வதற்கான ஆலோசனையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை