முன்னாள் போராளிக்கு வாழ்வியலுக்காக கிணறு அமைத்துக் கொடுத்து உதவி.!!

JCC OBA 96 குழுமத்தின் அனுசரனையில் கடுங்காயங்களுடனும் ஒரு கண் தெரியாமலும் ஒரு பிள்ளையுடன் உள்ள முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு ஏழு அடி தண்ணீர் கிணற்றில் நிற்கத்தக்கவாறு கிணறு அமைத்துக் கொடுத்துள்ளனர்.வன்னி மாவட்டத்தின் பல இடங்களிலும் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்ற இச்சூழ்நிலையில் இவர்களுக்கு கிணறு அமைத்து கொடுத்து காத்திரமான பணி ஆற்றி உள்ளனர். இவருக்கு வெளிச்சம் அமைப்பால் வாழ்வாதார உதவியாக பசு மாடு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இவருக்கு சொந்தமாக வீடு இல்லாமல் இவர்களின் காணிக்கு அருகில் உள்ள சிறிய வீட்டில் வசிக்கின்றனர். அங்கும் கிணறு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் அரச வீட்டு திட்டம் கிடைக்கவுள்ளது.மகிழ்ச்சியான விடயம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.