பேர்லின் அம்மா உணவகத்தின் “அம்மா பல்பொருள் வாணிபம்" தாயகத்தில் உதயம்!📷

பேர்லின் அம்மா உணவகம் தாயக உறவுகளுக்கு கடந்த 5 வருடங்களாக வாழ்வாதார உதவிகளை தொடர்ச்சியாக செய்துவருகின்றது.
இவ் உதவிகளை மேலும் அதிகரிக்க  பேர்லின் அம்மா உணவகம் தாயகத்தில் மட்டக்களப்பில் "அம்மா பல்பொருள் வாணிபம்" எனும் வியாபார நிலையத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மங்களகரமாக ஆரம்பித்துள்ளது.

5 வருடங்களுக்கு மேலாக எம் மீது நம்பிக்கையும் , அன்பும் செலுத்தி வரும் அனைத்து உறவுகளுக்கும் நாம் நெஞ்சார நன்றியை தெரிவிக்கின்றோம்.

இன்நிகழ்வில்
மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் பெருமதிப்பிற்குரிய  சிறீதரன்,

வைத்தியகலாநிதி சியாம் ராகேஸ் மற்றும் அவரது துணைவியார் (மருத்துவர்),

மட்டக்களப்பு தென்மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர்
ந. தயாசீலன்,

ஆங்கிலகல்வி ஆலோசகர் திவாகர்,

சமுக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் ஜீ.ஜே. பி.பிரகாஷ் ,

ஓய்வுநிலை தலைமை ஆசிரியர் கோபாலப்பிள்ளை,

உயர்தர கணிதபாட ஆசிரியர் குககுமரராஜா,

ஆசிரியர் ரவிகரன்,

மற்றும் கோறளைப்பற்று பிரதேசசபை கௌரவ  உறுப்பினர் குணராசா குலசேகரன்.

ஆகியோர் கலந்து கொண்டு ஆசி வழங்கியிருந்தனர்.

வருகை தந்து ஆசி வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

அனைவரும் வருக ஆதருமாறு யேர்மனி அம்மா உணவகம் மற்றும் மட்டக்களப்பு அம்மா உணவகம் நிர்வாகிகளும் வேண்டுகோள்.

இல- 43, புகையிரத நிலைய வீதி, மட்டக்களப்பு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.