பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கெற் வழங்கும் திட்டம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக, நடைமுறைப்படுத்தப்படும் கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கற்றுகளை வழங்கும் திட்டம் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.


இது தொடர்பான ஆரம்ப வைபவம் ஜனாதிபதியின் தலைமையில் களவான கஜு-கஹவத்த-சாஷ்திரோதய வித்தியாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இதன் போது களவான பிரதேசத்தைச் சேர்ந்த 13 பாடசாலைகளளைச் சேர்ந்த 1500 மாணவர்களுக்கு பால்  பக்கற்றுகள் வழங்கப்பட உள்ளன.

முதல் வருடத்தில் 950 கனிஷ்ட பாடசாலைகளில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையில் கல்வி பயிலும் மாணவர்கள் 4 இலட்சம் பேருக்கு  வழங்கப்படுமென்று ஜனாதிபதி ஆலோசகர் சட்டத்தரணி ஷிரான் லக்திலக தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போஷாக்குக் குறைபாட்டிலிருந்து மீட்டெடுக்கும் மற்றும் கிராம பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். பாடசாலை மாணவர்களுக்க பாலை வழங்கும் வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு, மில்கோ நிறுவனம், கார்கில்ஸ் நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து நடத்துகின்றன.

பாடசாலைகளில் சேரும் வெற்றுப்பால் பைக்கெட்டுக்களை மீள் சுழற்சியாக விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பணிப்பாளர் திருமதி ரேணுகா பீரிஸ் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.