ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய சுயாதீன ஆணைக்குழு அமைக்க வேண்டும் – ரஞ்சித் ஆண்டகை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீனமான உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


ஏனெனில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் மீதோ அவற்றினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மீதோ எவ்வித நம்பிக்கையும் தமக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று (ஞாயிற்றுக்கிழமை) மூன்று மாதங்கள் பூர்த்தியடைந்துள்ளன.

இதனை முன்னிட்டு கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன் இஸ்லாத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை திரிவுபடுத்தி அடிப்படைவாதத்தில் ஈடுபடுபவர்களை முஸ்லிம்கள் அவர்களது சமூகத்திலிருந்து முற்றாக ஒதுக்கி விடவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.