“ஷில்பசேனா” கண்காட்சியின் நிறைவு வைபவம்!!📷

விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை சமூகமயப்படுத்தும் நோக்கில் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் தொழிநுட்ப புரட்சி “ஷில்பசேனா” கண்காட்சியின் நிறைவு வைபவம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (21) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.