தமிழீழ வழியில்...!!

ஈழ விடுதலைப் போராட்டத்தை
ஒவ்வொரு தமிழனும்
தனது அடையாளமாக, ஆத்மமாக
பதிவெடுத்துக் கொள்கிறான்.

பெருகின்ற பெருமையில்
பெருமிதம் கொள்ளும் உயிராக
ஒவ்வொரு உயிரும் உரிமையாகிறது.

வீரத்தை விதைத்த எழுகையில்
விரதமிருந்து வரம் பெறுகிறது
விடுதலை நோக்கிய தாயகப் பயணம்.

இலட்சிய வெறி துடிப்பாகிறது
வாழ்வின் வாசலில் கோலமாக.
எதுவாகினும் எதிர்ப்போம் என்கிறது
எங்களின் மாவீர விடுதலை ஈகம்.

தலைவன் எங்கள் சூரியன் என்று
தமிழினம் வாழ்வை அசைக்கிறது.
விழியூற்றை விடுதலைக் கவிதையாய்
மொழிந்து கவி பாடும் குரல் பிரபாகரன்.

ஒற்றுமையை சுவாசத்தின் ஓசையாக்கி
ஒளிர் என்கிறது அந்தத் தமிழ் குரல்.
ஒடிந்து போன கனவுளை அடுக்கி
விசையெடுக்கிறது யுகத்தின் வேட்கை.

தமிழரின் தாகத்தைப் பறை ஓசையாக்கி
தடை உடைக்கிறது வீர எழுச்சிக் குயில்.
தர்மம் என்று தலையசைத்து சிவக்கிறது
தமிழ் சுமந்த அந்த பிரபாகரக் கால வெளி.

நம்பிக்கையை நடை பாதையாக்கி
தமிழன் என்று  நடக்கும் அழகு தமிழீழம்.
நச்சுப் புகை நடுவே நர்த்தனமாடுகிறது.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
என்ற உறுதி உரை சுமந்த நாட்டிய மயில்....

                                              கலைப்பரிதி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.